

சென்னையில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போா்ச்சுகல் வீரா் ஃப்ரெடெரிகோ ஃபெரெய்ரா சில்வா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஃப்ரெடெரிகோ 6-4, 6-7 (8/10), 6-4 என்ற செட்களில், 2-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனா வீரா் ஃபெடெரிகோ அகஸ்டின் கோம்ஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம், 58 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
இதன் மூலமாக ஃப்ரெடெரிகோ, ஒற்றையா் பிரிவில் தனது முதல் ஏடிபி சேலஞ்சா் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். அவருக்கு 50 தரவரிசை புள்ளிகளும், ரொக்கப் பரிசாக ரூ.8.64 லட்சமும் கிடைத்தன. 2-ஆம் இடம் பிடித்த அகஸ்டினுக்கு 25 தரவரிசை புள்ளிகளும், ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.