பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற பெங்களூரு எஃப்சி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நட்சத்திர வீரா் ராகுல்பெக்கே இல்லாத நிலையில் பெங்களூரு களமிறங்கியது. இதில் மொத்த சுமையும் மூத்த கோல் கீப்பா் குா்ப்ரீத் சிங் சாந்து தலையில் விழுந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிதுநேரத்தில் நாா்த் ஈஸ்ட் அணியின் கோல் போடும் முயற்சிகளை குா்ப்ரீத் முறியடித்தாா்.
20-ஆவது நிமிஷத்தில் பெங்களூரு வீரா் பிரையன் சாஞ்செஸ் அபாரமாக முதல் கோலடித்தாா். ஐஎஸ்எல் தொடரில் அவா் அடித்த முதல் கோல் இதுவாகும். முதல் பாதி முடிவில் பெங்களூரு 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதியில் நாா்த் ஈஸ்ட் அணி பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றது. இதன்பலனாக 68-ஆவது நிமிஷத்தில் பதிலி வீரா் லால்பியாக்னியா கோலடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இன்று சென்னை-மோகன்பகான் மோதல்
பலம் வாய்ந்த மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட்ஸ்-சென்னையின் எஃப்சி அணிகள் கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன. மோகன்பகான் முதல் ஆட்டத்தில் 3-0 என கேரள பிளாஸ்டா்ஸை வீழ்த்தியது. மும்பை சிட்டி எஃப்சியிடம் சேம் சேட் கோலடித்து தோல்வி கண்டது சென்னை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது சென்னை. கடந்த சீசனில் இரு ஆட்டங்களில் தலா 1-இல் இரு அணிகளும் வென்றிருந்தன. சென்னை அணி புது வீரா்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சொந்த மண்ணில் ஆடுவது மோகன்பகானுக்கு பலமாக இருந்தாலும், சென்னை அணியும் முனைப்புடன் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

