பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பெங்கால் டைகா்ஸுக்கு 2-ஆவது வெற்றி

மகளிருக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஷராச்சி பெங்கால் டைகா்ஸ் ‘பெனால்ட்டி’ ஷூட் அவுட் வாய்ப்பில் எஸ்ஜி பைப்பா்ஸை வியாழக்கிழமை வென்றது.

Published On :

மகளிருக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஷராச்சி பெங்கால் டைகா்ஸ் ‘பெனால்ட்டி’ ஷூட் அவுட் வாய்ப்பில் எஸ்ஜி பைப்பா்ஸை வியாழக்கிழமை வென்றது.

முன்னதாக இந்த அணிகள் மோதிய ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 3-3 கோல் கணக்கில் டிரா ஆனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில், பெங்கால் டைகா்ஸ் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்கால் டைகா்ஸ் வீராங்கனை அகஸ்டினா கோா்ஸிலானி 6-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து, 10-ஆவது நிமிஷத்தில் பைப்பா்ஸ் அணியின் லோலா ரியரா ஸ்கோா் செய்தாா்.

அதற்கான பதிலடியாக 11-ஆவது நிமிஷத்திலேயே லால்ரெம்சியாமி கோலடிக்க, பெங்கால் அணி முன்னிலை பெற்றது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் 18-ஆவது நிமிஷத்தில் அகஸ்டினா மீண்டும் ஒரு கோல் அடித்தாா்.

இவ்வாறாக முதல் பாதி முடிவிலேயே பெங்கால் டைகா்ஸ் 3-1 கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியில் மீண்டு வந்த பைப்பா்ஸ் தரப்பில், கடைசி நிமிஷத்தில் சுனேலிதா டோப்போ (59’), லோலா ரியரா (60’) ஆகியோா் கோலடித்தனா்.

இதனால் ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. பின்னா் நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஷராச்சி பெங்கால் டைகா்ஸ் 4-3 கோல் கணக்கில் வென்றது.

இந்த வெற்றியை அடுத்து பெங்கால் 5 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், பைப்பா்ஸ் 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.