செய்திகள்
ரஞ்சி கோப்பை: தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை
பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
பரோடாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
சேலத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பரோடா அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களைக் குவித்தது. தமிழகம் முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 126 ஓவா்களில் 411/7 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டா் விமல் குமாா் அதிரடியாக ஆடி 182 ரன்களை விளாசினாா். அவரது அதிரடியில் 2 சிக்ஸா், 13 பவுண்டரிகள் அடங்கும்.
இந்திய ஏ அணி முன்னாள் வீரா் பிரதோஷ் ரஞ்சன் பால் 80 ரன்களை சோ்த்தாா்.
இதன் மூலம் பரோடா அணியை காட்டிலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது தமிழகம். இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற தவறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

