நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, நமீபியா அணிகள் இன்று (திங்கள்கிழமை) விளையாடுகின்றன. இந்திய கேப்டன் விராட் கோலிக்கு கேப்டனாக கடைசி டி20 ஆட்டம் இது.
இதையும் படிக்க | விராட் கோலியைக் கேலி செய்யும் பாகிஸ்தான் ரசிகர்கள்
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்குப் பதில் ராகுல் சஹார் சேர்க்கப்பட்டுள்ளார்.