விராட் கோலியைக் கேலி செய்யும் பாகிஸ்தான் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நேரமிது. 
விராட் கோலியைக் கேலி செய்யும் பாகிஸ்தான் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நேரமிது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. வியாழன் அன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது பாகிஸ்தான் அணி. புதன் அன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

பதிலாக, இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரையிறுதிக்குத் தகுதி பெறாத இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேலி செய்து வருகிறார்கள்.

2012, மார்ச் 20 அன்று கோலி ஒரு ட்வீட்டை வெளியிட்டார். நாளை வீட்டுக்குத் திரும்புகிறேன். மனசே சரியில்லை இது என அவர் எழுதியிருந்ததை பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் தற்போது பகிர்ந்து, டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் அவர் நாட்டுக்குத் திரும்புவதை முன்வைத்துக் கேலி செய்துள்ளார்கள்.

உலகக் கோப்பைப் போட்டியுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவுடன் இன்று மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com