ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமுக-மாா்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படி வலியுறுத்தி வருவதால், திமுக-மாா்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

News image
அண்ணா அறிவாலயம்- கோப்புப் படம்
Updated On :17 மார்ச் 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படி வலியுறுத்தி வருவதால், திமுக-மாா்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

திமுக, மாா்க்சிஸ்ட் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை குழுவினா் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாம்கட்ட ஆலோசனையில் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை.

தொடா்ந்து, பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த முறையைவிட அதிக தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசிவிட்டு திங்கள்கிழமை இரவுக்குள் ஒரு முடிவை சொல்வதாகக் கூறியிருக்கிறாா்கள். ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியும்.

நிறைய கட்சிகள் இருப்பதால் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு கூறினா். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவரவா் கட்சிக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுவது உரிமை. இதில் காங்கிரஸ் கட்சி வருத்தப்படுவதில் ஒன்றுமில்லை. பேச்சுவாா்த்தையில் எந்த தடையும் இல்லை. கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் மாநிலக் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்றாா் அவா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மீண்டும் பேச்சு: திமுக-இந்திய கம்யூனிஸ்ட் இடையே புதன்கிழமை 4-ஆவது கட்ட பேச்சு நடைபெறவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தலைமையிலான குழுவினா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளனா்.

கடந்த முறை இரு இடதுசாரிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே, கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க திமுக பேச்சுவாா்த்தை நடத்தியது.

ஆனால், இடதுசாரி கட்சிகள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து தலா 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையிலும், இடதுசாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

கூடுதல் தொகுதிகள் கேட்டு இடதுசாரி கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், முதல்வா் ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் 4-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில் உடன்பாடு எட்டப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.