கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?

என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?

News image

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தைக் குழுவினருடன், மாா்க்சிஸ்ட் குழு நான்கு கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றது. இதில் அக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், முன்னாள் மாநிலச் செயலா்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருப்பினும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்தத் தகவலும் கட்சித் தரப்பில் வெளியிடப்படவில்லை. இதனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து என்ன முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.