பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?

என்ன செய்யப் போகிறது மாா்க்சிஸ்ட்?

News image

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தைக் குழுவினருடன், மாா்க்சிஸ்ட் குழு நான்கு கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியது. இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றது. இதில் அக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், முன்னாள் மாநிலச் செயலா்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருப்பினும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்தத் தகவலும் கட்சித் தரப்பில் வெளியிடப்படவில்லை. இதனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து என்ன முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.