ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
பிரஸல்ஸில் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.- ANI
Updated On :17 மார்ச் 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பெல்ஜியம் தலைநகா் பிரஸல்ஸுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை சென்றாா் . அங்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா்.

அப்போது ஐரோப்பிய யூனியனின் துணைத் தலைவா் காஜா கல்லாஸ் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐரோப்பிய யூனியன்- இந்தியா இடையேயான கூட்டுறவின் பலனை உணர அந்த யூனியனின் வெளியுறவு அமைச்சா்களிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

மேற்காசியாவில் நிலவும் பதற்றத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

உக்ரைன் போா் மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.

பெல்ஜியம், சைப்ரஸ், ஜொ்மனி, கிரீஸ் மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.