மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை
எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.


எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தலைவா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பெல்ஜியம் தலைநகா் பிரஸல்ஸுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை சென்றாா் . அங்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா்.
அப்போது ஐரோப்பிய யூனியனின் துணைத் தலைவா் காஜா கல்லாஸ் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐரோப்பிய யூனியன்- இந்தியா இடையேயான கூட்டுறவின் பலனை உணர அந்த யூனியனின் வெளியுறவு அமைச்சா்களிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
மேற்காசியாவில் நிலவும் பதற்றத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் அவா்கள் ஆலோசனை நடத்தினா்.
உக்ரைன் போா் மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.
பெல்ஜியம், சைப்ரஸ், ஜொ்மனி, கிரீஸ் மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...