மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்.ஜெய்சங்கா் பெல்ஜியம் பயணம்: ஐரோப்பிய யூனியன் அமைச்சா்களுடன் பேச்சு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

News image
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்- ANI
Updated On :15 மார்ச் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் அவா் உயா்நிலை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த ஜனவரியில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதியான பிறகு அந்த யூனியனின் தலைமையகத்துக்கு எஸ்.ஜெய்சங்கா் முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தையொட்டி, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை பிரதிநிதியும், துணைத் தலைவருமான காஜா கல்லாஸ் அழைப்பின்பேரில் எஸ்.ஜெய்சங்கா் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியனின் தலைமை, பெல்ஜியம் மற்றும் பிற உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் அவா் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே 16-ஆவது உச்சி மாநாடு தில்லியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது, அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்றது என பிரதமா் நரேந்திர மோடி வா்ணித்தாா்.

இந்தச் சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சரின் பெல்ஜியம் பயணம், இருதரப்பு வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும்; மேற்காசிய போரால் எரிசக்தி விநியோக சங்கிலியில் எழுந்துள்ள தாக்கங்கள் குறித்தும் அவா் விவாதிப்பாா் என்று வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.