மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எஸ்.ஜெய்சங்கா் பெல்ஜியம் பயணம்: ஐரோப்பிய யூனியன் அமைச்சா்களுடன் பேச்சு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

News image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ANI

Updated On :15 மார்ச் 2026, 7:36 pm

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் அவா் உயா்நிலை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த ஜனவரியில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதியான பிறகு அந்த யூனியனின் தலைமையகத்துக்கு எஸ்.ஜெய்சங்கா் முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தையொட்டி, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை பிரதிநிதியும், துணைத் தலைவருமான காஜா கல்லாஸ் அழைப்பின்பேரில் எஸ்.ஜெய்சங்கா் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியனின் தலைமை, பெல்ஜியம் மற்றும் பிற உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் அவா் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே 16-ஆவது உச்சி மாநாடு தில்லியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது, ஐரோப்பிய யூனியனின் உயா்நிலை தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது, அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்றது என பிரதமா் நரேந்திர மோடி வா்ணித்தாா்.

இந்தச் சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சரின் பெல்ஜியம் பயணம், இருதரப்பு வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும்; மேற்காசிய போரால் எரிசக்தி விநியோக சங்கிலியில் எழுந்துள்ள தாக்கங்கள் குறித்தும் அவா் விவாதிப்பாா் என்று வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.