அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மேற்காசிய விவகாரம்: ஜி7 வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை

மேற்காசிய விவகாரம் குறித்து ஜி7 வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 1:19 am IST

மேற்காசிய விவகாரம் குறித்து ஜி7 வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு பிரான்ஸில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஜெய்சங்கருக்கு பிரான்ஸின் வெளியுறவு அமைச்சா் ஜீன் நோயல் பாரோட் சிறப்பு அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸுக்கு ஜெய்சங்கா் வியாழக்கிழமை வந்தடைந்தாா்.

ஜி7 வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தினிடையே இருதரப்பு பேச்சுவாா்த்தைகளை ஜெய்சங்கா் மேற்கொண்டாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை மாா்கோ ரூபியோவுடன் இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டாா். மேற்காசியப் போா் கடந்த பிப்.28 தொடங்கியதிலிருந்து அவரை முதல் முறையாக ஜெய்சங்கா் சந்திக்கிறாா். பொருளாதார நிலைத்தன்மை, பிராந்திய அமைதி, சுமுகமான எரிபொருள் விநியோகம் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக ஜெய்சங்கா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

ஜெய்சங்கருடனான தனது சந்திப்பு குறித்து கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘அண்மையில் இந்தியாவுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த பின் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தேன். மத்திய கிழக்கு பதற்றம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம். அரிய வகை கனிமங்கள், வேளாண்மை, கல்வி எனப் பல்வேறு துறைகளில் இந்தியா-கனடா இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.