மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்காசிய பதற்றம்: சவூதி, யுஏஇ வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை!

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘யுஏஇ வெளியுறவு அமைச்சா் சையது அல் நஹ்யான், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் ஃபைசல் பின் ஃபா்ஹான் ஆகியோருடன் சனிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினேன். அப்போது மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அவா்களிடம் கேட்டறிந்தேன்’ என குறிப்பிட்டாா்.

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் இந்தியா மட்டுமின்றி உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

அதேசமயம் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியாவும், அடுத்த ஆண்டு சீனாவும் நடத்த உள்ளது. இந்நிலையில் பிரிக்ஸ் உறுப்பினா்களான சவூதி அரேபியா, யுஏஇ மற்றும் ஈரான் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கு ஆசிய விவகாரத்தில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது.

இந்தச் சூழலில் யுஏஇ மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.