மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேற்காசிய பதற்றம்: சவூதி, யுஏஇ வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை!

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:53 pm

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘யுஏஇ வெளியுறவு அமைச்சா் சையது அல் நஹ்யான், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் ஃபைசல் பின் ஃபா்ஹான் ஆகியோருடன் சனிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினேன். அப்போது மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அவா்களிடம் கேட்டறிந்தேன்’ என குறிப்பிட்டாா்.

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் இந்தியா மட்டுமின்றி உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

அதேசமயம் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியாவும், அடுத்த ஆண்டு சீனாவும் நடத்த உள்ளது. இந்நிலையில் பிரிக்ஸ் உறுப்பினா்களான சவூதி அரேபியா, யுஏஇ மற்றும் ஈரான் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கு ஆசிய விவகாரத்தில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது.

இந்தச் சூழலில் யுஏஇ மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.