தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

மேற்காசிய பதற்றம்: சவூதி, யுஏஇ வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை!

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :16 மார்ச் 2026, 2:23 am IST

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘யுஏஇ வெளியுறவு அமைச்சா் சையது அல் நஹ்யான், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் ஃபைசல் பின் ஃபா்ஹான் ஆகியோருடன் சனிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினேன். அப்போது மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அவா்களிடம் கேட்டறிந்தேன்’ என குறிப்பிட்டாா்.

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் இந்தியா மட்டுமின்றி உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

அதேசமயம் பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியாவும், அடுத்த ஆண்டு சீனாவும் நடத்த உள்ளது. இந்நிலையில் பிரிக்ஸ் உறுப்பினா்களான சவூதி அரேபியா, யுஏஇ மற்றும் ஈரான் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கு ஆசிய விவகாரத்தில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது.

இந்தச் சூழலில் யுஏஇ மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.