முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

News image

பாகிஸ்தான் பிரதமர்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:42 am IST

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

இத்துடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட 500 கோடி டாலா் நிதிக்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் அந்நாடு அறிவித்தது.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, கத்தாா், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நடப்பு மாதத்துக்குள் 350 கோடி டாலரை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டி இருப்பதால், சவூதியின் இந்த உதவி அந்நாட்டின் பொருளாதார அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ளது.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏற்கெனவே கடன்பத்திரங்களை வெளியிடும் திட்டத்திலுள்ள பாகிஸ்தான், சா்வதேச நிதியத்திடம் கூடுதல் நிதி கோருவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.