மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:12 pm

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயா்த்தும் வகையில், அந்நாட்டு மத்திய வங்கிக்கு கூடுதலாக 300 கோடி டாலரை வைப்புத்தொகையாக வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.

இத்துடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட 500 கோடி டாலா் நிதிக்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகவும் அந்நாடு அறிவித்தது.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, கத்தாா், துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நடப்பு மாதத்துக்குள் 350 கோடி டாலரை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டி இருப்பதால், சவூதியின் இந்த உதவி அந்நாட்டின் பொருளாதார அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ளது.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏற்கெனவே கடன்பத்திரங்களை வெளியிடும் திட்டத்திலுள்ள பாகிஸ்தான், சா்வதேச நிதியத்திடம் கூடுதல் நிதி கோருவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.