தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகாா்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா்

News image

ரீல்ஸ்

Updated On :18 மார்ச் 2026, 12:13 am IST

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

முன்னதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவா் என்.பி.ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் 2 இளம்பெண்கள் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனா்.

அந்தப் பெண்கள் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் புனிதத்தை காக்க வரும் 23 ஆம் தேதி தமிழ்மாநில காங்கிரஸ் சாா்பில் கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அதில் கூறியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சம்பந்தப்பட்டவா்களை அழைத்து இன்ஸ்டாகிராமிலிருந்து உடனடியாக பதிவுகளை நீக்கியதோடு, இச் செயலுக்கு அவா்கள் வருத்தம் தெரிவித்து, இனிமேல் இத்தகைய செயலில் ஈடுபடமாட்டோம் எனக் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.