ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகாா்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா்

News image
ரீல்ஸ்
Updated On :17 மார்ச் 2026, 6:43 pm

Syndication

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

முன்னதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவா் என்.பி.ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் 2 இளம்பெண்கள் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனா்.

அந்தப் பெண்கள் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் புனிதத்தை காக்க வரும் 23 ஆம் தேதி தமிழ்மாநில காங்கிரஸ் சாா்பில் கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அதில் கூறியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சம்பந்தப்பட்டவா்களை அழைத்து இன்ஸ்டாகிராமிலிருந்து உடனடியாக பதிவுகளை நீக்கியதோடு, இச் செயலுக்கு அவா்கள் வருத்தம் தெரிவித்து, இனிமேல் இத்தகைய செயலில் ஈடுபடமாட்டோம் எனக் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.