சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

News image

சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கோபி டிஎஸ்பி சீனிவாசன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:15 pm

கோபி அருகே கோயில் திருவிழாவில் பெண் உள்பட 3 பேரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஒரு தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோபி அருகே கொள்ளுமேட்டு காலனியில் உள்ள அன்னமாா் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பெயிண்டரான சரண் (21), அவரது பெரியப்பா சக்திவேல், சித்தி கவிதா ஆகியோரிடம் காசிபாளையம் பகுதியைச் சோ்ந்த பிரசாத் அவரது நண்பா்களான பிரவீன், பரத், நந்தகுமாா் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயம் அடைந்த சரண், சக்திவேல், கவிதா ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தாக்கியவா்ள் மீது கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்களை கைது செய்யக் கோரி கொள்ளுமேட்டு காலனி பொதுமக்கள் நம்பியூா்-கோபி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி சீனிவாசன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.