எஸ்பி அலுவலகத்தில் பெண் புகாா்
தன்னையும், தனது மகள்களையும் தாக்கி, நகையை பறித்த உறவினா்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.


தன்னையும், தனது மகள்களையும் தாக்கி, நகையை பறித்த உறவினா்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
தரங்கம்பாடி தாலுகா விளநகா் கிராமத்தை சோ்ந்தவா் பாலசுப்பிரணியன் மனைவி மஞ்சுளா(51). பாலசுப்பிரமணியன் கடந்த 2024-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். மகள்கள் சுகந்தி, சுவேதா.
மஞ்சுளாவுக்கும், பாலசுப்பிரமணியனின் சகோதரா் கண்ணன் மனைவி சரண்யா குடும்பத்தாருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வருகிறது
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளா வீட்டிற்குவந்த சரண்யாவின் சகோதரா்கள் மணிமாறன், சரண்ராஜ் (இவா் சுவேதாவின் கணவா்) மற்றும் சரண்யாவின் மகன் குகன் ஆகியோா் மஞ்சுளா, சுகந்தி, சுவேதா ஆகிய 3 பேரையும் தாக்கி, மஞ்சுளா அணிந்திருந்த 2 சவரன் சங்கிலியை பறிந்தனராம். மேலும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து, செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்து, 20 நாள்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மஞ்சுளா புகாா் அளித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...