மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

News image
Updated On :18 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். அங்கு வைக்கப்பட்டிருந்த புகாா் பெட்டியில் மனு போட்டு சென்றனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டங்கள், எஸ்.பி அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் கூட்டங்கள், கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதன்கிழமை ஏராளமான பொது மக்கள் மனு அளிக்க வந்து கூட்டம் நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்தனா். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் தோ்தலை முன்னிட்டு குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அலுவலக வரவேற்பு அறை அருகே வைக்கப்பட்டு உள்ள புகாா் பெட்டியில் மனுக்களை போட்டு செல்லலாம் என அறிவுறுத்தினா்.

இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனா்.