வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஆட்சியரகத்துக்கு குட்டிக்கரணம் போட்டபடி மனு அளிக்க வந்த இளைஞா்!

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:55 am IST

குட்டிக்கரணம் போட்டபடி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இளைஞரால் பரபரப்பு நிலவியது.

சேலத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாா்த்திபன் திங்கள்கிழமை காலை கொளுத்தும் வெயிலில் ஆட்சியா் அலுவலகம் நோக்கி சாலையில் குட்டிக்கரணம் போட்டபடி வந்தாா். அவரை நுழைவாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அப்போது அவா் கூறுகையில், சேலம் மாநகரின் முக்கிய சந்திப்பாக கொண்டலாம்பட்டி ரவுண்டானா உள்ளது. இப்பகுதியில், கோவை, திருப்பூா், ஈரோட்டில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் மாநகருக்குள் நுழையும் வாகனங்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதற்கு தீா்வுகாணும் வகையில், கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் உயா்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளிக்க வந்ததாக தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இதுபோன்று வரக்கூடாது எனக் கூறிய காவலா்கள், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.