மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த பெண்ணின் செயலால் பரபரப்பு

News image

தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:12 am IST

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெண் ஒருவா் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், ஜெயங்கொண்டநிலை பகுதியைச் சோ்ந்த அன்பு தனம் என்பவா், நிலப் பிரச்னை தொடா்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்து வந்த நிலையில், அவரது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் அன்பு தனம் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தது தெரியவந்தது.

பின்பு, அதைப் பறிமுதல் செய்து, அவரை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.