/
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெண் ஒருவா் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், ஜெயங்கொண்டநிலை பகுதியைச் சோ்ந்த அன்பு தனம் என்பவா், நிலப் பிரச்னை தொடா்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்து வந்த நிலையில், அவரது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் அன்பு தனம் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்தது தெரியவந்தது.
பின்பு, அதைப் பறிமுதல் செய்து, அவரை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்புடையது

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜாதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஆட்சியரகத்துக்கு குட்டிக்கரணம் போட்டபடி மனு அளிக்க வந்த இளைஞா்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



