அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஹார்திக்கை பாராட்டிய ரோஹித்! ஆர்ப்பரித்த வான்கடே மைதானம்!

டி20 உலகக் கோப்பை பாராட்டு விழாவில் ஹார்திக்கை பாராட்டிய ரோஹித் சர்மா பாராட்ட வான்கடே மைதானம் ஆர்ப்பரித்தது.

News image

வான்கடே மைதானம், ஹார்திக் பாண்டியா.

Updated On :5 ஜூலை 2024, 11:53 am IST

டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, மும்பையில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாா்படோஸிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட இந்திய அணியினா், 16 மணி நேர இடைநில்லா பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தனா். பின்னர் மும்பை வந்தனர்.

ஊா்வலத்தின் நிறைவாக இரவில் வான்கடே மைதானத்தை அடைந்த இந்திய அணியினருக்கு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மைதானத்தில் உற்சாகப் பாடல் ஒலிக்க, இந்திய வீரா்களும் நடனமாடிக் கொண்டாடினா்.

இதில் பேசிய ரோஹித் சர்மா, “ஹார்திக் முக்கியமான அந்தக் கடைசி ஓவரை வீசினார். எவ்வளவு ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி அது மிகவும் அழுத்தமிக்க தருணம். அந்த ஓவரை ஹார்திக் சிறப்பாக வீசினார். அவருக்கு தலைவணங்குகிறேன்” என்றார்.

இதற்கு வான்கடே மைதானம் ஹார்திக் ஹார்திக் என கூச்சலிட்டது. ஹார்திக் நெகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மும்பை ரசிகர்கள் ஐபில் போது ஹார்திக்கை கிண்டல் செய்தனர். தற்போது பாராட்டுகிறார்கள். இது நெகிழ்ச்சியாக இருக்கிறதென கிர்க்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.