பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த விராட் கோலி!

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மிக மோசமான வீரராக மாறியுள்ளார் விராட் கோலி.

News image

ஆட்டமிழந்த விராட் கோலி - Ramon Espinosa

Updated On :28 ஜூன் 2024, 12:42 pm IST

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மிக மோசமான வீரராக மாறியுள்ளார் விராட் கோலி.

அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. கடைசி 6 போட்டிகளிலும் மோசமாக விளையாடிய விராட் கோலி முக்கியமான இந்தப் போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

இருப்பினும் ரோஹித் சர்மா நன்றாக விளையாடியதால் இந்திய அணி நல்ல ரன்களை குவிக்க முடிந்தது.

இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியின் ரன்கள் 1,4,0,24,37,0,9 என மொத்தமாக 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரியாக 10.71 என இருக்கிறது.

குறைந்தபட்சம் 6 போட்டிகள் கொண்ட டி20 உலகக் கோப்பையில் மிக மோசமான வீரராக விராட் கோலி உருவாகியுள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கோலியும் 2ஆவது இடத்தில் வங்கதேசத்தை சேர்ந்த தன்ஜித் ஹாசன் சராசரி 10.86 ஆகவும் இருக்கிறார்.

டி20 உலகக் கோப்பையில் மோசமான சராசரி கொண்ட பட்டியல்:

1. விராட் கோலி - 10.71 (2024)

2. தன்ஜித் ஹாசன் - 10.86 (2024)

3. தமிம் இக்பால் - 11.86 (2014)

4. கைல் கோட்சர் - 12.00 (2021)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.