நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பதவி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் 10,000 போலீஸார்

சென்னை, ஆக. 1:   தமிழக காவல்துறையில் பதவி உயர்வை எதிர்நோக்கி 10 ஆயிரம் காவலர்கள் காத்திருக்கின்றனர்.   காவல் துறையில் கடந்த 24.5.99-ல் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களில் 3,050 பேர் பணியில் சேர்ந்தனர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:54 am

ச. குமரன்

சென்னை, ஆக. 1:   தமிழக காவல்துறையில் பதவி உயர்வை எதிர்நோக்கி 10 ஆயிரம் காவலர்கள் காத்திருக்கின்றனர்.

  காவல் துறையில் கடந்த 24.5.99-ல் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களில் 3,050 பேர் பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு 9 மாதங்களுக்கு பணிக்கால பயிற்சியுடன் அடிப்படை ஊதியமாக ரூ. 3,500 அளிக்கப்பட்டது.

  10 ஆண்டுகளுக்குப் பின் 24.05.09-ல் இவர்களுக்கு, இயல்பான வகையில் முதல் நிலைக் காவலர்களாக பதவி உயர்வு, அதற்கேற்ப ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளையும் வழங்க வேண்டும்.

  இதில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றும் 18 காவலர்களுக்கும், எஸ்பிசிஐடி, கமாண்டோ பிரிவு போலீஸôர் 13 பேருக்கும் முதல் நிலைக் காவலர்களாக பதவி உயர்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

  ஆனால், சென்னை மாநகர காவல்துறையில் உள்ள 900 காவலர்கள் உள்பட 99-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த சுமார் 3,000 போலீஸôருக்கு இன்னமும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

  பதவி உயர்வு வழங்க, அரசு ஆணையிட்டால், இவர்களின் அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதமும், இல்லையெனில் 3 சதவீத உயர்வை உயர் அதிகாரிகளே வழங்கலாம் என்ற விதியுள்ளது. ஆனால், இன்னமும் அரசும், அதிகாரிகளும் இவர்கள் மீது "பாராமுகமாகவே' உள்ளனர்.

தலைமைக் காவலராக பதவி உயர்வு...   இந்நிலையில், தமிழக காவல்துறையில் கடந்த 1993-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த 7 ஆயிரம் போலீஸôருக்கு 16 ஆண்டுகளாகியும் தலைமைக் காவலராக, இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

  இதே நிலையில் சென்னை மாநகர காவல் துறையிலும் சுமார் 3000 போலீஸôர் பதவி உயர்வை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

  ஆனால், பதவி உயர்வு குறித்து அரசு தொடர்ந்து "மெüனம் காத்து' வருகிறது.

   அதிரடி மாற்றம் பயன் தருமா?   இந்நிலையில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவலர்கள் அவ்வப்போது அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

  குற்றப் புலனாய்வில் அனுபவமும், சம்பவ இடம் பற்றிய சூழல் அறிவும், புலனாய்வுத் திறனும் உள்ள போலீஸôர் திடீரென இடமாற்றம் செய்யப்படுவதால் வழக்கு விசாரணை மற்றும் புலனாய்வு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

  இதே நிலைதான் அனைத்துப் பிரிவு காவலர்களுக்கும் ஏற்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கையாளுவதிலும், குற்றப் பதிவு விவரங்களின் படி, குற்றங்கள் நிகழாமல் வருமுன் காக்கும் வகையில் போலீஸôர் செயல்படுவதிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.

  ஏற்கெனவே, பதவி உயர்வு பெறாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மட்டுமே ஏற்று நடக்கும் காவலர்களுக்கு, தீடீர் இடமாறுதல் ஆணைகள் மனச் சோர்வை அளிக்கும் நிலை உள்ளது.

கலந்தாய்வு முறையில் பொது மாறுதல்?:    அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காவலர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

  இதைக் கண்காணித்து முறைப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் வழங்க வேண்டும். அல்லது காவலர்களுக்கும், ஆசிரியர்கள் போல கலந்தாய்வு முறையில் பொது மாறுதல் வழங்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கை. அரசு செவி சாய்க்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.