கருணாநிதி தலைமையில் இப்போது தமிழகத்தில் நடந்து வரும் மோசமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் சேலத்தில் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த மாநாடு தொடர்பாக, முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையை விமர்சித்து தே.மு.தி.க. நிர்வாகிகள் பெயரில் ஒரு விளம்பரம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. தே.மு.தி.க.விற்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போதுள்ள ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்ற தீய நோக்கத்தில், ஏற்கெனவே ஊழலில் திளைக்கும் ஆளும் வர்க்கத்தினர் வேண்டுமென்றே திட்டமிட்டு நச்சு நினைப்போடு இந்த விளம்பரத்தை வெளியிட்ள்ளனர். வரும் தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள்.