இந்த ஆண்டு நடைபெறவுள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.67 லட்சம்; அது தொடர்பாக விளம்பரம் செய்ய ரூ.33 லட்சம் என ரூ.1 கோடியை வழங்க வேண்டும் என்று சுற்றுலாத் துறை அரசு செயலருக்கு திட்ட வரைவு அளித்துள்ளது. தனியார் அறக்கட்டளையான தமிழ் மையம், சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான கலைக் குழுக்களைத் தேர்வு செய்யும் பணியைச் செய்கிறது. இந்த மையத்துக்கும், அரசுக்கும் பண பரிவர்த்தனை எதுவும் கிடையாது. கலைஞர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு அவர்களிடமிருந்து நேரடியாக ரசீது பெறப்படும். நிகழ்ச்சி தொடர்பாக சுற்றுலாத் துறை விளம்பரம் செய்யும். திறந்தவெளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி தனியார் அமைப்புக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்பது தவறு என்று விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது: