சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பொன்னேரி - கோயம்பேடு இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பொன்னேரி, ஜூலை 28: பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு 1 மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி ப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:19 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, ஜூலை 28: பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு 1 மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அத்துடன் பொன்னேரியை சுற்றிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகர், பாடி, கொளத்தூர், வடபழனி, கிண்டி, பல்லாவரம், அமைந்தகரை, அரும்பாக்கம், ஈக்காடுதாங்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

மின்சார ரயிலில் சென்றால் 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்... சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயிலில் பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றால் சென்னை சென்ட்ரல் சென்று அங்குள்ள சுரங்கப் பாதையை கடந்து மாநகர பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகிவிடுகிறது. அதே நேரத்தில் பொன்னேரியில் இருந்து செங்குன்றம் வழியாக கோயம்பேடு செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் பயணம் செய்தால் 50 நிமிடங்களில் கோயம்பேடு சென்று விடலாம்.

இதன் காரணமாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் கோயம்பேடு உள்ளிட்ட மேற்கண்ட ஊர்களுக்கு பொன்னேரியில் இருந்து பஸ்ஸில்தான் சென்று வருவர்.பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதில் பெரும்பாலான பஸ்கள் பொன்னேரியை சுற்றிலும் உள்ள மீஞ்சூர், பழவேற்காடு, கோளூர், தத்தைமஞ்சி, ஆரம்பாக்கம், பெரும்பேடு, எளாவூர், கும்மிடிபூண்டி, பெரியபாளையம், ஆரணி, தேர்வாய், காட்டூர், கள்ளூர், அரசூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

அதே போன்று கோயம்பேடுக்கு 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் சாதாரண பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படவேண்டும். பொன்னேரியில் இருந்து கோயம்பேடு சென்று வர போதுமான பஸ் வசதி இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பொன்னேரியில் இருந்து 9 கி.மீ. தூரமுள்ள சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள தச்சூர் கூட்ரோட் சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்வர்.

அதே போன்று திரும்ப வருவதற்கும் கோயம்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர், காளஹஸ்தி, திருப்பதி, நாயுடுபேட்டை, சூளூர்பேட்டை, சத்தியவேடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏறி தச்சூர் கூட்ரோடில் இறங்கி பொன்னேரி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக தினமும் கோயம்பேடு சென்று வரும் வியாபாரிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே பொன்னேரியில் பகுதியில் இருந்து வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கோயம்பேடு சென்று வரும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ்ûஸ இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பொன்னேரி எம்.எல்.ஏ. பொன்.ராஜா ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.