ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

சீமானுக்கு பாராட்டு விழா நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை, மார்ச் 21: சீமானுக்கு ஏப்ரல் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தவும், அந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மாவட்டப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:44 am IST

சென்னை, மார்ச் 21: சீமானுக்கு ஏப்ரல் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தவும், அந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் செü.சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதில் அவர் கூறியிருந்ததாவது: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில், தமிழ் முழக்கத்தின் சாகுல் ஹமீது, திரைப்பட இயக்குநர் புகழேந்தி உள்ளிட்டோரின் பங்கேற்புடன் சீமானுக்கு 13.12.11-ல் பாராட்டு விழா நடத்த அனுமதி கோரி அம்பத்தூர் உதவி ஆணையரிடம் 9.12.10-ல் மனு அளிக்கப்பட்டது.

 அந்த விழாவுக்கு அனுமதி தர மறுத்து உதவி ஆணையர் 11.12.10-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்து நீதிபதி கே.சந்துரு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:

 சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டதை ரத்து செய்து இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்திய உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில், தடை செய்யப்பட்ட இயக்கத்தில் வெறுமனே உறுப்பினராக இருப்பது அல்லது அதற்கு ஆதரவு தருவது என்பது குற்றமென சொல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளன.

 எனவே, அந்தக் கூட்டத்துக்கு போலீஸôர் அனுமதி அளிப்பதுடன், பாதுகாப்பும் தர வேண்டும் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.