எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர்: மாவட்டத் தலைநகராக உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  ÷சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள த
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
Updated on
2 min read

திருவள்ளூர்: மாவட்டத் தலைநகராக உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

 ÷சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள திருவள்ளூர் கடந்த 1997-ம் ஆண்டு மாவட்டத் தலைநகராக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இங்கு 1 லட்சத்துக்கு மேற்பட்டோரும் வசித்து வருகின்றனர்.

 ÷மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட நீதிமன்றம், பல்வேறு பொறியியல் கல்லூரிகள், தலைமை தபால் அலுவலகம் என பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் திருவள்ளூரில் அமைந்துள்ளன.

 ÷பழமை வாய்ந்த வீரராகவர் திருக்கோயில், புட்லூர் மாரியம்மன், காக்களூர் ஆஞ்சநேயர் என பல்வேறு கோயில்கள் உள்ளன. அருகே உள்ள நேமம் கல்வி பகவான் கோயிலுக்கு வெளிமாநிலஙகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 ÷திருவள்ளூர் அருகே காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் (அயல் மாநிலத்தவர் உள்பட) பணிபுரிந்து வருகின்றனர்.

 ÷சென்னை புறநகரில் தாம்பரத்தை போன்று திருவள்ளூரும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. அரக்கோணத்தில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் திருவள்ளூர் வழியாகதான் இயக்கப்படுகின்றன.

 ÷சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்கின்றன.

 ÷திருவள்ளூர் ரயில் நிலையத்தின் மூலம் நாள்தோறும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர்.÷தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மாதம் ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. பயணச்சீட்டு முன்பதிவு மையம் மூலம் ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டப்படுகிறது.

 ÷ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருவள்ளூர் ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது.

 ÷ஆனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணம் சென்றே வெளியூர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.

 ÷திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. இதில் 5 நடைமேடைகள் 24 பெட்டிகள் கொண்ட ரயில்களையும், நடைமேடை 2, 3 ஆகியவை 28 பெட்டிகள் கொண்ட ரயில்களையும் நிறுத்தும் வசதி உடையவை.

 ஏலகிரி எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களே தறபோது நின்று செல்கின்றன.

 சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (2675-2676), சென்னை - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (2679-2680), சென்னை - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (2639-2640), சென்னை - பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ் (2607-2608), சென்னை - மும்பை மும்பை எக்ஸ்பிரஸ் (6012-6011), சென்னை எழும்பூர் - கச்சகெüட எக்ஸ்பிரஸ்

 (7561-7562), சென்னை - மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (6627-6628), சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் (2671-2672) போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை திருவள்ளூரில் நிறுத்த வேண்டும்.÷

 இதனால் திருவள்ளூர், திருநின்றவூர், ஸ்ரீபெரும்புதூர், பட்டாபிராம், ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். தாம்பரம் போன்று திருவள்ளூரையும் ரயில் முனையமாக மாற்றினால் மிகுந்த பயன் உண்டாகும்.÷திருவள்ளூர் நகராட்சிக் கூட்டத்திலும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்திச் செல்ல வேண்டும் என தலைவர் பாஸ்கரன் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com