சென்னை, செப். 17: சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு உள்புறம் முழுவதும் இடிக்கப்பட்டுவிட்டது. வெளிப்புற சுவர்கள் மட்டும் எஞ்சியுள்ளன.
கட்டட ஊழியர்கள் இரவு நேரங்களில் வீட்டை இடித்து ஜன்னல், கதவு, கம்பிகளை எடுத்துச் சென்று விடுகின்றனர். கட்டட இடிப்பைத் தடுக்க தீவிர முயற்சியை அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை என அந்த வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர் தெரிவித்தார்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் வாழ்ந்த வீடு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் உள்ளது. அவருடைய மறைவுக்குப் பிறகு அவரின் வாரிசுகள் அந்த வீட்டைப் பராமரித்து வந்தனர். இப்போது அவரது வாரிசுகள் அந்த வீட்டை வேறொருவருக்கு விற்றுள்ளனர்.
வீட்டை விலைக்கு வாங்கியவர்கள் அதை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவலை அறிந்த தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் மிகுந்த வருத்தமும் தெரிவித்தனர். அந்த இல்லத்தை அரசு மீட்டு நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அங்கு சென்று, வீட்டை இடிக்கக் கூடாது என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வீட்டை இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால், அன்று இரவே மீண்டும் வீட்டின் உள்புறத்தை இடித்து, ஜன்னல் மரக் கட்டைகள், கம்பிகளை ஊழியர்கள் வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றதாக உ.வே.சா. வீட்டுக்கு அருகில் வசிக்கும் ரங்கநாதன் (70) என்பவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து பாதுகாத்த தமிழ்த் தாத்தாவின் வீடு இடிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. வீடு இடிக்கும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பத்திரிகைகளில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, வெளிப்படையாக இடிக்காமல் மறைமுகமாக இரவு நேரங்களில் இடித்து, இடிபாடுகளை உடனடியாக எடுத்துச் சென்று விடுகின்றனர்.
வீட்டின் வெளிப்புறம் மட்டுமே இடிக்கப்படாமல் காட்சியளிக்கிறது. உள்புறம் முழுவதும் இடிக்கப்பட்டு விட்டது. எனவே, இனி அரசே நினைத்தாலும் இதைக் காப்பாற்ற முடியாது. தொன்மை இலக்கியங்களை மீட்டுக் கொடுத்தவர் வாழ்ந்த இல்லத்தை மீட்க அரசு அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றார்.
சொந்த ஊரில்...: கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் அரசால் நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நுங்கம்பாக்கம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: புறநகா் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அமைச்சா் கீா்த்தனா மீது திமுக புகாா்
மாநகராட்சியில் விதிமீறியதாக 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம்

24 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



