தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

டேங்கர் லாரி மோதி 50 ஆடுகள் சாவு

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரி விலக்கில்  திங்கள்கிழமை காலையில் டேங்கர் லாரி மோதியதில்

News image
Updated On :2 ஏப்ரல் 2013, 3:39 am IST

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரி விலக்கில்  திங்கள்கிழமை காலையில் டேங்கர் லாரி மோதியதில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.

டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, சங்கரப்பன்,  வாழைச்சின்னு மற்றும் நாகப்பன் ஆகியோர் மேய்ச்சலுக்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தனர். திங்கள்கிழமை காலை பால்சாமி என்பவர் ஆடுகளை நத்தம்பட்டி நோக்கி ஓட்டிச் சென்றாராம்.

ராஜபாளையம் சாலையில் காடனேரி விலக்கு அருகே சென்றபோது, பரமத்தி வேலூரில் இருந்து ராஜபாளையத்துக்கு பாமாயில் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி,  ஆடுகள் கூட்டத்துக்குள் எதிர்பாராதவிதமாக புகுந்தது.

இதில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், சம்பவ இடத்திலேயே பலியாகின. 20-க்கும்  மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டி.கல்லுப்பட்டி போலீஸார் லாரி ஓட்டுநர் பரமத்திவேலூர் அருகே உள்ள உப்புப்பட்டியைச் சேர்ந்த ராஜா (47) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.