திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டாசு ஆலை வெடி விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்துள்ளது.

Updated On :1 மே 2013, 10:51 pm

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்துள்ளது.

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் எஸ்.எஸ். விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பவுல் காந்தி என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த செல்லையா நாயக்கன்பட்டி மாரியப்பன் மகன் நடராஜன் (48) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.