செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பாலத்தில் கார் மோதி இருவர் சாவு

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
Updated On :21 ஜூன் 2013, 10:20 pm

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நரசிம்மர் கோயிலைச் சேர்ந்த மனோகரன் மகன் பாலாஜி (40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மகன் சிவசங்கர் (42) ஆகிய இருவரும் திருத்தணி முருகன் கோயில் பகுதியில் பஞ்சாமிர்தக் கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன், திருத்தணி நரசிம்மர் கோயில் தெருவைச் சேர்ந்த சம்பத் (55) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (50) ஆகிய நான்கு பேரும், வெல்லம் வாங்குவதற்காக காரில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு வந்தனர்.

சென்னை ஆவடி களிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பாலாஜி (40) காரை ஓட்டி வந்தார்.

வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகேயுள்ள புலவர்பாளையம் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தேசிய நெடுஞ்சாலை அவசர ஊர்தி மூலம் நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு கார் ஓட்டுநர் பாலாஜியும், திருத்தணியைச் சேர்ந்த சம்பத்தும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு பாலாஜி, ஆனந்தன், சிவசங்கர் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.