தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூலை 2013, 5:56 pm

குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன், அவ்வப்போது சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை பகல் 1 மணியளவில் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நடைபாலம் வரையிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது. பழைய குற்றாலத்தில் நடப்பாண்டு இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்குச் செல்லும் நடைபாதை வழியாக தண்ணீர் பாய்ந்தோடியது.

இதனால் அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டியதால் அங்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிற்றருவி மற்றும் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.