கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

14 அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்ட 23 அகதிகளில் 14 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:55 pm

தினமணி

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்ட 23 அகதிகளில் 14 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 23 பேர், தங்களைத் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் மயக்கமடைந்த 20 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டி.எஸ்.பி. மூவேந்தன், வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் அகதிகளிடம் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிப்ரவரி 20-க்குள் 10 பேரை விடுவிப்பதாகவும், தொடர்ந்து படிப்படியாக அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேர், உண்ணாவிரதம் மேற்கொண்ட 3 பேர் என மொத்தம் 14 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.