திருநெல்வேலி மாவட்டத்தில் ரோஸ்மேரி கல்வி நிறுவனங்கள், விவேகானந்தா வித்யாலயா, சாராள் தக்கர் தொடக்கப் பள்ளி, லிட்டில் பிளவர், சி,எஸ்.ஐ. மெட்ரிக், பெல், சைல்டு ஜீசஸ், சாரதா கல்லூரி, மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 5360 மாணவர், மாணவிகள் காந்திய உணர்வுடன் மகாத்மா காந்தியை நினைவுகூறும் வகையில் கையில் கம்பு, காந்தியக் கண்ணாடி, வேட்டி, ஒரு முழம் துண்டு, தலைமுடியை மறைக்கும் ஒப்பனையுடன் கையில் தேசிய கொடியினை ஏந்தி மைதானத்தில் மாணவர், மாணவிகள் அணிவகுத்து உறுதிமொழி எடுத்தனர். உலக சாதனை நிகழ்ச்சிக்காக நடைபெற்ற இந்த மாணவர்கள் அணிவகுப்பை அசிஸ்ட் வேல்ட் ரெக்கார்ட் அமைப்பின் நிறுவனர் ஆர். ராஜேந்திரன் பதிவு செய்தார்.