ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல்: 25-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது.

Updated On :23 ஆகஸ்ட் 2014, 12:54 pm

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது.

    இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்த்தில் நீர்வள நிலவளத்திட்டம் மூலம் பரளையாறு உபவடிநிலத்தில் உள்ள 8 கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான  தேர்தல் வருகிற 31-ம் தேதி நடைபெற இருக்கிறது.

   அதன் அடிப்படையில் டி.வேலங்குடி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், ஆண்டியேந்தல் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், சாந்திசேரி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், வேலனேரி, சொரிக்குளம், முள்ளிக்குடி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், கொட்டகாய்ச்சியேந்தல் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், தேளி, கடம்பங்குளம், கனையமறித்தான், கீழக்கொன்றைக்குளம் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம், தர்மம் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கம் உள்ளிட்ட 8 சங்கங்களின் தேர்தல் மேற்குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது.

   இத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் திருச்சுழி வட்டாட்சியர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுக்களை வருகிற 25-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையில் அளிக்கலாம். அதேபோல், வருகிற 26-ம் தேதி இறுதி செய்யப்பட்டு போட்டி ஏற்படும் சங்கங்களுக்கு 31-ம் தேதி வாக்கு பதிவு நடத்தப்பட இருக்கிறது. எனவே இத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள் குறிப்பிட்ட பாசன அமைப்புகளின் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெற்ற நில உடமையாளர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.