திருநெல்வேலி மாவட்டத்தில் சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி, கஸ்பா, வல்லராமபுரம், அகிலாண்டபுரம், பொய்கைமேடு, குத்தாலப்பேரி, ஆட்கொண்டார்குளம், கே.வி.ஆலங்குளம், கீழவீரசிகாமணி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்து அளித்த மனு:
எங்கள் பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை, தமிழக அரசு சூரிய ஒளி மின் திட்டத்திற்காக வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்துவதற்காக கணக்கீட்டு பணியினை தொடங்கியுள்ளதாக அறிகிறோம்.
மேலும், தனியார் காற்றாலை உரிமையாளர்களும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வரும் நிலையில் பலர் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசின் சூரியஒளி மின் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!
ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


