இச்சிறப்பு வாந்த சேக்கிழார் குருபூஜையும், கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழார் விழா அறக்கட்டளை வெள்ளிவிழா ஜூன் 2-ம் தேதி சேக்கிழார் மணி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சேக்கிழார் திருவுருவச்சிலை வீதி உலா, சிறப்பு வழிபாடு, சொற்பொழிவுகள், உரையரங்கம், மகளிர் அரங்கம், வெள்ளி விழா மலர் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பங்கேற்று சேக்கிழார் விருதினை வழங்கி ஆதியுரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் க.சுவாமிநாதன், உறுப்பினர் டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.