நவ.29-ம் தேதி அன்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரியும், கடைகளை அடைக்க வலியுறுத்தியும் சிதம்பரம் நகரில் அனைத்து கட்சி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் அளித்து வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.மாதவன், மாவட்ட அமைப்பாளர் வி.எம்.சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைசெல்வம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.