கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியை சுற்றி 10-க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் தொடங்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு வாழும் ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல், பன்னாட்டு முதளாளிகள் லாபம் கொழிக்கவே மத்திய,மாநில அரசு செயல்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 50 சதவீத பேருந்துகளை சிதம்பரம் - சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீவா, சுதாகர், ஜெயசீலன், வினோபா, விவசாயிகள் சங்க ஒன்றிய அமைப்பாளர் கருனைச்செல்வம், வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக பரங்கிப்பேட்டை நகரில் நடைபெற்ற மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி மக்கள் சந்திப்பு பிரசாரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.