மழை: தென் மாவட்டங்களுக்கான 12 ரயில்கள் ரத்து

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மழை: தென் மாவட்டங்களுக்கான 12 ரயில்கள் ரத்து
Updated on
1 min read

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் தென்  மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்- தாம்பரம் இடையே ரயில் தண்டவாளங்களில் நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று புறப்பட வேண்டிய 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:

சென்னை - காரைக்கால் பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை- புதுச்சேரி, சென்னை- தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை- மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை- காரைக்கால் எக்ஸ்பிரஸ், சென்னை- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com