தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மழை, வெள்ளத்தால் பாதிப்பக்கட்ட இடங்களில் வட்டாச்சியர் ஆய்வு

பண்ருட்டியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தாங்க வைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :2 டிசம்பர் 2015, 6:37 am

சீனிவாசன்

பண்ருட்டியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தாங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தாழ்வான பகுதியில் நீர் தேங்கியுள்ளது. நெல்லிக்குப்பம் அருகேயுள்ள மெய்டபாக்கம், திருகண்டேஸ்வரம், எல்லான்புரம், அங்குச்செட்டிபாளையம், புலவன்குப்பம், பண்ருட்டி நகரப்பகுதியில் சாமியார் தர்கா, களத்துமேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.மாதவன், கேபிள் டிவி வட்டாச்சியர் வி.ரவிக்குமார், பண்ருட்டி வட்டாச்சியர் ஆர்.கீதா மற்றும் வருவாய் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.