மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சென்னை வெள்ளம்: காக்னிசன்ட் ரூ. 260 கோடி ஒதுக்கீடு

ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2015, 11:34 am

ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மண்டலத்தில் இயங்கும் பிரதான ஐ.டி. நிறுவனங்களில் காக்னிசன்ட் (சி.டி.எஸ்.) நிறுவனமும் ஒன்றாகும். இங்குள்ள 11 அலுவலகங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 40 மில்லியன் யு.எஸ். டாலர்கள் (சுமார் ரூ. 260 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 10 டாலர்கள் (ரூ. 65 கோடி) தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

மீதமுள்ள 30 டாலர்கள் சி.டி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மறுவாழ்வு மற்றும் நிறுவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு நீண்டகால கடன்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மறுவாழ்வு பணிகளில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு என்பது முக்கிய பங்கு வகிக்கும் என காக்னிசாட் தலைவர் கார்டன் கூறினார்.

சென்னை நகரின் மறு நிர்மாணத்தின் போது தேவைப்படும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு காக்னிசாட் துணை நிற்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.