வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிம்புவை கண்டித்து பெண்கள் போராட்டம்: நெல்லையில் 21 பேர் கைது

திருநெல்வேலியில் புதன்கிழமை நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரை கண்டித்து அவர்களது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :16 டிசம்பர் 2015, 12:00 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் புதன்கிழமை நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரை கண்டித்து அவர்களது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இசை அமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய பாடலில், பெண்களை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் சிம்புவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை திருநெல்வேலி சந்திப்பில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எம். தங்கம், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் வை. ராஜகுரு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.