கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை: பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தின் போது உடன்பாடு!

இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 9:19 am

PTI

இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது.

அதிகமான அணு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில், மேலும் அணு உலைகளை அமைப்பதற்கு இந்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதன்படி திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ஏற்கெனவே உள்ள அணு உலைகளுடன் மேலும் இரு அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23, 24 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

இதற்கு முன்னோட்டமாக, ரஷ்ய அணுசக்தி துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி நிகோலாய் ஸ்பாஷ்கி கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியா வந்து, இந்திய அணுச்சக்தி துறை செயலர் சேகர் பாஸுவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கூடங்குளத்தில் இயங்கி வரும் முதலாவது அணு உலையை முறைப்படி பெற்றுக் கொள்வது, இரண்டாவது அலகில் குறைந்தப்பட்ச மின் உற்பத்தி, 3,4-வது அணு உலை கட்டுமானத்தை தொடங்குவது, 5, 6-வது அணு உலைகளுக்கான ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

புதிதாக அமைக்கப்படும் 5, 6-வது அணு உலைகள், ஏற்கெனவே உள்ள வி.வி.இ.ஆர். தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அணு உலை அமைப்பத்தில் மத்திய அரசு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இடப்பற்றாக்குறை, பணியாளர் குடியிருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில் மேலும் அணு உலைகளை அமைப்பது என அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் புதிதாக அணு உலை அமையவிருக்கும் இடங்களில் உள்ளூர் மக்களின் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்துவது தவிர்க்கப்படும். உள்கட்டமைப்பு செலவும் குறையும் என அரசு கருதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.