47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாகன பழுது நீக்க முகாம்: யமஹா மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்கள் கால நீட்டிப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் இலவச இரு சக்கர வாகன பழுது நீக்கும் முகாம் வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 9:56 am

ராமசாமி

மழை, வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் இலவச இரு சக்கர வாகன பழுது நீக்கும் முகாம் வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின.

இவ்வாறு நீரில் மூழ்கி சேதமடைந்த இரு சக்கர வாகனங்களை பழுது நீக்க இலவச பழுது நீக்க முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடந்து வந்த இலவச முகாம்களுக்கு (21ம் தேதி) இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, யமஹா மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவன வாகன பழுதுநீக்க முகாம் கால அளவை வரும் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.