விருதுநகரில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 25 பேர் கைது

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி அரசு மதுபானக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 25 பேரை வெள்ளிக்கிழை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி அரசு மதுபானக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 25 பேரை வெள்ளிக்கிழை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மதுபானக் கடை முன்பு நடந்த  போராட்டத்திற்கு நகரத் தலைவர் பொன்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மதுரை கோட்ட அமைப்புச் செயலாளர் அழகர்சாமி கண்டன உரை நிகழ்த்தி பேசுகையில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். அதைத் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டே பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள மதுபானக்கடைையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் 25 பேரை கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com