கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விவசாயிகள் தரமான விதைகளை பார்த்து வாங்க விதை ஆய்வுத்துறையினர் வலியுறுத்தல்

விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வுத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On :29 ஜூலை 2015, 11:54 am

விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வுத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பருத்தி சாகுபடி செய்வதற்கு தரமான விதைகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை தவிர்த்து மளிகை கடையிலோ அல்லது வீட்டிற்கு கொண்டு வரும் விதைகளையோ எக்காரணம் கொண்டும் வாங்கி பயன்படுத்த வேண்டாம்.

எனவே இதை தவிர்க்கும் வகையில் விதை விற்பனை நிலையங்களுக்கு சென்று விற்பனை பட்டியலை கேட்டு பெற வேண்டும். அதில், விதை குவியல் எண், காலவதிநாள், விதை உரிம எண், விதை உற்பத்தி மைய விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அதேபோல், விதை பையில் பொறுத்தப்பட்டுள்ள அட்டையில் காலவதி நாள், எந்த பருவத்திற்கு ஏற்றது என்கிற விவரங்களையும் சார்பார்த்து வாங்குவதுதான் நல்லது. குறிப்பாக மூடையில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக் கூடாது. எனவே போலி விதைகளை யாரவது விற்பனை செய்வதை அறிந்தால் உடனடியாக விதை ஆய்வு மைய துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.