வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விவசாயியின் வயல்வெளியில் 7100 கிலோ மக்காச்சோளம் விற்பனை    

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்திலுள்ள எம்.களத்தூர் கிராமத்தில் விவசாயி நிலத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் அப்பகுதியிலேயே விற்பனை செய்யப்பட்டு, உரியத் தொகை

News image
Updated On :2 மார்ச் 2015, 10:25 am

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்திலுள்ள எம்.களத்தூர் கிராமத்தில் விவசாயி நிலத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் அப்பகுதியிலேயே விற்பனை செய்யப்பட்டு, உரியத் தொகை விவசாயிக்கு வழங்கப்பட்டது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக, விவசாயிகள் ஆர்வலர் குழுவினரால் எம்.களத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை விவசாயி கே.குமார் தன்னுடைய நிலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த 7100 கிலோ மக்காச்சோளத்தை வயல்வெளியிலேயே வளையப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி செந்தில்குமாருக்கு விற்பனை செய்தார்.

கிலோ ரூ.12-க்கு என்ற அளவில் விற்பனையான மக்காச்சோளத்துக்குரிய தொகையான ரூ. 85,200 உடனடியாக வழங்கப்பட்டது.இந்த நேரடி வியாபாரி -விவசாயி விற்பனை பரிமாற்றத்துக்கு வேளாண் வணிகத் துறையின் வேளாண் உதவி அலுவலர் தொட்டியம் சரவணக்குமார்,முசிறி வேளாண்மை அலுவலர் புஷ்பாசிவகுமார், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எம்.களத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட விவசாயிகள் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு, குழு மூலம் முதன்முறையாக வயல்வெளியில் நேரடியாக மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டுள்ளது நல்ல பலனைத் தந்துள்ளது என்று திருச்சி வேளாண் வணிகத்  துணை இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.