விருதுநகர் தனியார் வாகன பழுது நீக்கும் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 12 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.
விருதுநகர் சத்திமூர்த்தி சாலையைச் சேர்ந்தவர் பிரவீன்(40). இவர் இப்பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் நிலையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வழக்கம் போல் நிலையத்தை மூடிவிட்டு பணியாளர்கள், உரிமையாளர் ஆகியோர் வீடுகளுக்கு சென்றார்களாம். இந்நிலையில், நள்ளிரவில் பழுது நீக்கும் நிலையத்திலிருந்து புகையாக வெளியே வந்துள்ளது.
அதையடுத்து, பிரவீனுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்து திறந்து பார்க்கையில் தீ மளமள பரவியுள்ளது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்து பக்கத்து குடியிருப்புகளுக்கு பரவவிடாமல் தீயை போராடி அணைத்தனர்.
இந்த திடீர் தீவிபத்தில் பழுது நீக்கம் செய்வதற்கு வந்த 12 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

