விருதுநகர் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமகள் வரவேற்புரை வழங்கினார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினிகளை மொத்தம் 181 பேருக்கு வழங்கினார்.
இதில், நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் டி.பி.வெங்கடேஷ், அதிமுக நகரச் செயலாளர் நயினார் முகமது, நகராட்சி உறுப்பினர்கள் தனலட்சுமி, சுரேஷ்குமார், அன்னலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 77 பேருக்கும், சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 147 பேருக்கும், மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 42 பேருக்கும், ஹாஜிபி செய்யது மேல்நிலைப்பள்ளியில் 196 பேருக்கும் அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


